தமிழக அரசு மழைநிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் தோல்வியடைந்திருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒருநாள் மழைக்கே சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த் கூறினார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும், நிவாரணம் வழங்குவதற்கும் தமிழக அரசு அக்கறையோடு செயல்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும், விவசாயிகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என்றும் வெள்ளத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, அவர் இவ்வாறு கூறினார்.

மழை வெள்ள பாதிப்பு குறித்த நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். தருமபுரியில் எம்.ஜி.ஆர். விழா நடக்கவுள்ள இடத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *