ஊழலுக்கு எதிரான தமது போராட்டம் தொடரும் ; தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு….

ஊழலுக்கு எதிரான தமது போராட்டம் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஹிமாச்சல பிரதேசம் சட்டப்பேரவை தேர்தல் வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக குல்லு மற்றும் பலம்ப்பூர் பகுதியில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இமாச்சலப்பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த, ரயில் மற்றும் விமான சேவைகளுக்கான முயற்சியை மத்திய அரசு ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக சுட்டிக்காட்டினார். தம்மை எவ்வளவு தாக்கினாலும், நேர்மை எனும் வேள்வியை தொடர்ந்து நடத்தப்போவதாக தெரிவித்த அவர் ஊழலுக்கு எதிரான தமது போராட்டம் தொடரும் தொடரும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *