ரயில்வேயில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு ; 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை….

ரயில்வேயில் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் 10 லட்சம் பேருக்கு கூடுதலாக வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என அத்துறையின் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், ரயில் லைன்கள் முழுவதும் மின்மயமாக்க நிர்ணயிக்கப்பட்ட 10 ஆண்டு கால இலக்கை 4 ஆண்டுகளாகக் குறைத்துள்ளதாகக் கூறினார். ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கும் ரயில்வே துறையில், இதன் மூலம் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் எரிபொருள் செலவு குறையும் எனக் கூறப்படுகிறது. மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பான, சவுகரியமான பயணத்துக்காக ரயில்வேயின் பல துறைகளில் 150 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படும் என்றும், இதன் மூலம் கூடுதலாக 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என்றும் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *