அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டது ; பெங்களூரு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு….

அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பிதார்- காலாபுராகி ரயில்பாதை திட்ட துவக்க விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பிதார் – கலாபுராகி ரயில் பாதை பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், தற்போது இத்திட்டம் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்று தெரிவித்தார். மேலும், அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இதேபோல், பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, காஷ்மீருக்கு சுயாட்சி வழங்கவேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் பேசுவது, நமது ராணுவ வீரர்களை அவமதிக்கும் செயலாகும் என்று குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *