ரேசன் சர்க்கரை விலை உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு…..

ரேசன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்க்கரை விலை உயர்வை தமிழக அரசு திரும்ப பெற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநில அரசுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை மத்திய அரசு சரி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதவாத சக்திகள் காலூன்ற கூடாது என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோட்பாடு என்றும் அதனை அடிப்படையாக வைத்து வரும் 3-ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். மேலும், கந்துவட்டி கொடுமையை கண்டித்து விரைவில் நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *