மெர்சல் திரைப்படத்தை இணையதளத்தில் பார்த்த பா.ஜ.க தேசிய தலைவர் எச்.ராஜா மீது தமிழக அரசு சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மறுசீரமைப்பு – சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வழக்கறிஞர் மு. பாண்டிய அரசனின் நினைவேந்தல் மற்றும் அவரது குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மெர்சல் திரைப்படத்தை இணையதளத்தில் பார்த்த பா.ஜ.க தேசிய தலைவர் எச்.ராஜா மீது தமிழக அரசு சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மெர்சல் படத்தில் உள்ள கருத்துகளுக்கு பாஜக எதிர்ப்பதில், அரசியல் உள்நோக்கம் உள்ளது என்றும் தெரிவித்தார்.
(பைட் – திருமா. மெர்சல் படம் தொடர்பானது)
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், கேரளாவில், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களை கோயில் அர்ச்சகர்களாக நியமித்த கேரள முதலமைச்சர் பினராய் விஜயனை சந்தித்து நன்றி தெரிவிக்கவுள்ளதாக கூறினார்.