தான் முதலமைச்சராக இருந்தபோது, குஜராத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டது ; பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டு….

தான் முதலமைச்சராக இருந்தபோது, குஜராத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் காங்கிரஸ் செயல்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

குஜராத்தில் நீர்வழிப் போக்குவரத்தை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதலமைச்சராக இருந்த போது, மாநில வளர்ச்சிக்காக கொண்டுவந்த திட்டங்களை செயல்படுத்த விடாமல் காங்கிரஸ் முட்டுக்கட்டை ஏற்படுத்தி வந்தது என்றும் அதே முட்டுக்கட்டை மனப்பான்மையை மத்தியிலும் காங்கிரஸ் காட்டி வருகிறது என்றும் தெரிவித்தார். தற்போது குஜராத்தில் நடந்துவரும் வளர்ச்சித் திட்டங்கள், கட்டுமானங்கள் அனைத்தும் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு கொண்டுவரப்பட்டவை என்று கூறிய பிரதமர் மோடி, கடந்த 3 ஆண்டுகளில் குஜராத்தின் வளர்ச்சிக்காக தனிப்பட்ட முறையில் முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *