50 ஆயிரத்திற்கு மேல் ரொக்க பரிவர்த்தனைக்கு அசல் ஆவணம் கட்டாயம் ; வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு….

50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை செய்வோரின் அடையாள நகல்களை அசல் ஆவணத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

50 ஆயிரத்திற்கும் மேல் ரொக்கமாக வங்கி பரிவர்த்தனை செய்வோர், அடையாள ஆவண நகல் மற்றும் பான் எண் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அடையாள ஆவண நகல் தருபவர்கள், அவை போலியாகவோ, மோசடி செய்ததாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ், இதுதொடர்பான அறிக்கை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் தரும் அடையாளச் சான்றின் நகலுடன், அசல் ஆவணத்தை சரிபார்த்து வங்கிகள் பதிவு செய்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *