முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்று வரும் கைதிகளை மனிதாபிமானம் அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 5 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்த 60 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை விடுவிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கைதிகளின் விவரங்களை பெற 9 மத்திய சிறைச்சாலைகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.