மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பான பிரச்சனைக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்;

மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பான பிரச்சனைக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை அம்பத்தூர் அருகே நடைபெற்ற விடுதலை சிறுத்தை கட்சியின் நகர நிர்வாகி இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கும் என்று தெரிவித்தார்.

மேலும் மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பான பிரச்சனைக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *