மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாரம்பரியம் மாறாமல் 6 மாதங்களுக்குள் சீரமைக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்த பகுதியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் தீப்பிடித்ததற்கு கடைகள்தான் காரணம் என்பது தெரியவந்தால், அனைத்து கடைகளும் அகற்றப்படும் என்று தெரிவித்தார். மேலும் ஆகமவிதி மற்றும் பாரம்பரியம் மாறாமல் 6 மாதங்களுக்குள் கோயிலில் சீரமைப்பு பணிகள் நிறைவுபெறும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டதால், கோயில் உள் பகுதியில் உள்ள கடைகளை மூட உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.