மீனவர்களுக்கு அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்களை வழங்க வேண்டும்; தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்…..

மீனவர்களுக்கு அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்களை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இறையியல் கல்லூரி வளாகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிறிஸ்த்தவ சமூக நீதி பேரவையின் சார்பில் ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கு இரங்கல் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் மற்றும் பேராயர் எஸ்றா. சற்குணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் இக்கூட்டத்தில் பேசிய எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மீனவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்று தெரிவித்த அவர், மீனவர்களுக்கு அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்களை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப்போக்கால் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *