மாலத்தீவில் 15 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் அறிவித்து அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் கயூம் உத்தரவிட்டுள்ளார்.

பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்ட 9 பேரை விடுவிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதிபர் அப்துல்லா யாமீன் கயூம் தலைமையிலான கட்சியில் இருந்து விலகிய 12 எம்.பி.க்களின் தகுதிநீக்கம் செல்லாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த இரு உத்தரவையும் அதிபர் யாமின் ஏற்க மறுத்துவிட்டார். இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் மாலத்தீவில் 15 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கங்கள் ஏற்படாமல் தடுக்க அதிபர் யாமின் அவசர நிலை பிரகடனம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *