கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நாதுராம், மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நாதுராம், தினேஷ்சவுத்ரி, பத்தாராம் ஆகிய மூவரையும் கடந்த 30ம் தேதியில் இருந்து வரும் 9ம் தேதிவரையில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கொள்ளையடித்த நகைகளை பெங்களூரூ மற்றும் சென்னை வியாபாரிகளிடம் விற்பனை செய்தது தெரியவந்து, அந்த நகைகைளை போலீசார் மீட்டனர். இந்நிலையில் அவர்கள் மூவரையும் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் கோபிநாத் முன்பு ஆஜர்படுத்திய போலீசார், பின் அவர்களைப் மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *