19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் அணிக்கு மும்பை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நியூசிலாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 4வது முறையாக இந்திய அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. கோப்பையை வென்ற இளம் வீரர்கள் நாடு திரும்பினர். மும்பை விமான நிலையம் வந்திறங்கிய அவர்களுக்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் வரவேற்றனர். இதனிடையே 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *