மாநில அரசுக்கும், வருமானவரித்துறை சோதனைக்கும், எந்தவித தொடர்பும் கிடையாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்..
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆய்வு செய்தார் என்று கூறுவதே தவறு என்றும், அரசு திட்டங்களை தெரிந்து கொள்ளவே ஆளுநர் அதிகாரிகளை சந்தித்ததாக தெரிவித்தார். ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடைபெற்ற சோதனையால் மனம் வேதனை அடைந்துள்ளதாகவும், ஒரு சிலர் செய்த தவறின் காரணமாக ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளதாக கூறினார். மேலும் வரி ஏய்ப்பவர்கள் மீது சோதனை நடத்துவது வழக்கம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.