தீ வைப்பு சம்பவங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உடனடி இழப்பீடு வழங்க கோரிய வழக்கு; ஜனவரி 5ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தீ வைப்பு சம்பவங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உடனடி இழப்பீடு வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஆதம்பாக்கத்தில் திருமணம் செய்ய மறுத்த இந்துஜா என்ற பெண்ணை இளைஞர் ஒருவர் தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உடனடி இழப்பீடாக 3 லட்சம் ரூபாய் வழங்க கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூரிய பிரகாசம் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அமில வீச்சில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உடனடி இழப்பீடாக 3 லட்சம் ரூபாயை வழங்கவும், இலவச சிகிச்சை வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி மனுதாரர் வாதிட்டார். இதையடுத்து, மனு மீது ஜனவரி 5ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *