ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் புவி இயற்பியல் நிபுணர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். பின்னர் இக்கூட்டத்தில் பேசிய தர்மேந்திர பிரதான், தாம் பொறுப்பேற்ற பின் பெட்ரோலிய அமைச்சகம் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் எரிசக்தி துறையில் வளர்ச்சி காண்பது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்று ம், பெட்ரோலிய எரிபொருள் இறக்குமதியை 10 சதவிகிதம் அளவுக்கு குறைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
2017-11-19