இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் என்ற பெண்மனி 2017ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார்.

இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் என்ற பெண்மனி 2017ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார்.

சீனாவில் உள்ள சான்யா நகரில் இந்த ஆண்டுக்கான உலக அழகி போட்டி நடைபெற்றது. பல சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்சிகோ, இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த 5 பெண்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் 2017-ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக மனுஷி சில்லர் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மனுஷி சில்லருக்கு உலக அழகிக்கான கிரீடம் சூட்டப்பட்டது. கடந்த 2000ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த பிரியங்கா சோப்ரா உலக அழகியாக தேர்வானார். அதன் பிறகு 17 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் உலக அழகியாக தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *