புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவது என்ற நோய் புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு பரவிவிட்டதாக தெரிவித்தார். மேலும் தமிழக முதலமைச்சரோ, துணை முதலமைச்சரோ சந்திக்க நேரம் கேட்டால் ஒதுக்கும் பிரதமர் தான் சந்திக்க நேரம் கேட்டால் ஒதுக்க மறுப்பதாகக் குற்றம் சாட்டினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகத்தில் தலையிட ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.
2017-11-19