காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனை டிடிவி தினகரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், சுமார் 14 மணி நேரம் நடைபெற்ற சிகிச்சை நல்லபடியாக முடிந்ததாக தெரிவித்தார். நடராஜன் நலமாக உள்ளதாகவும், ஒரு வார காலம் பார்வையாளர்கள் யாரையும் நடராஜனை பார்க்க அனுமதிக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் தினகரன் கூறினார்.
2017-10-05