நாளை முதல் புதிய திரைப்படங்கள் வெளியாகாது என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 40சதவீதமும், புதுச்சேரியில் 60 சதவீதமும் வரி கொடுத்து, எந்த தயாரிப்பாளராலும் படத்தை வெளியிட முடியாது என கூறினார்.
முன்னதாக, தயாரிப்பாளர் சங்கத்துக்கும், திரையரங்க உரிமையாளர் சங்கத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் கூட்டத்தில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.