மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை க்ரீம்ஸ் சாலையில், நீலம் பண்பாட்டு மையம் சார்பில், அமைக்கப்பட்டிருந்த புகைப்படக்கண்காட்சியை, எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் செயல் நிறுத்தப்பட வேண்டும் என கூறினார்.

இதனிடையே, சென்னை ஆயிரம் விளக்கில் திடீர்நகர் பகுதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் பார்வையிட்டார். திடீர்நகர் பகுதி மக்களை அகற்றும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என எழுச்சித்தமிழர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *