இலங்கை அரசு நிறுவனங்களில் தொண்டமான் பெயரை மீண்டும் இடம் பெறச் செய்ய வேண்டும்; வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு தி.மு.க செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் ….

இலங்கை அரசு நிறுவனங்களில் சவுமிய மூர்த்தி தொண்டமான் பெயரை மீண்டும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு தி.மு.க செயல்தலைவர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை மலையகத்தில் இந்திய வம்சாவளி தமிழர் தலைவரான சவுமியமூர்த்தி தொண்டமான் பெயரை, இலங்கை அரசு நிறுவனங்களில் இருந்து அந்நாட்டு அரசு நீக்கியது. தொண்டமான் பெயர் நீக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு எழுதிய கடிதத்தில், தொண்டமான் பெயரை நீக்கியது மலையகத்தில் பணிபுரியும் தமிழர்களை கடுமையாக பாதித்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் தொண்டமான் பெயரை இலங்கை அரசு நிறுவனங்களில் உடனடியாக இடம்பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *