மத்திய அரசின் உதவியோடு மீனவர்களை மீட்க நடவடிக்கை; கோவை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசின் உதவியோடு மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் தமிழக அரசின் சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், மீனவர்களை மீட்பதற்காக பிரதமரிடமும், மத்திய உள்துறை அமைச்சரிடமும் தாம் பேசியதாகவும் தெரிவித்தார். மேலும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் மட்டுமில்லாமல் இன்னும் ஆயிரம் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் என்று கூறினார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுமென்றே அரசு மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *