மதசார்பற்ற மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அதி.முக. சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் மதசார்பற்ற மாநிலமாக திகழ்ந்து வருவதாக தெரிவித்தார். மேலும் கிறிஸ்துவ மக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.