நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு; காலை தீர்ப்பு வழங்குகிறது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்…

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

முந்தைய, காங்கிரஸ், தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு, கூட்டணி அரசில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேட்டால் அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் கூறியிருந்தது. இந்த வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *