ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான முழு வீடியோ பதிவை விசாரணை ஆணையத்திடம் வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான வீடியோ ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று கூறினார். மேலும் முழு வீடியோ பதிவை விசாரணை ஆணையத்திடம் வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.