மகளின் கல்விக் கட்டணத்துக்காக, சாராய கடத்தலில் ஈடுபட்ட MBA பட்டதாரி கைது

அரியானாவிலிருந்து டெல்லிக்கு சாராயம் கடத்தப்படுவதைத் தடுக்க போலீசார், வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். டெல்லியில் டாப்ரி (Dabri) என்ற இடத்தில் கார் ஒன்றை சோதித்த அவர்கள், 23 அட்டைப் பெட்டிகளில் சாராயம் கடத்தப்பட்டதைக் கண்டுபிடித்தனர். கடத்தலில் ஈடுபட்ட குர்கானைச் சேர்ந்த மோகித் கோஸ்வாமி (Mohit Goswami), என்பவரை கைது செய்து விசாரித்தனர். அதில், எம்.பி.ஏ. மற்றும் பி.டெக் பட்டதாரியான அவர், சிங்கப்பூரில் நிறுவனத்தில் வேலையிழந்து 3 மாதங்களாக வருமானமின்றி தவித்தது தெரியவந்தது. மகளின் கல்விக்கட்டணம் 80 ஆயிரம் ரூபாய் செலுத்த வழியின்றி, நண்பர் மூலம் கிடைத்த தொடர்பில், ஒரு அட்டைப்பெட்டிக்கு 500 ரூபாய் என்ற வீதத்தில் சட்டவிரோத சாராயத்தை கடத்தியதாக கோஸ்வாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *