பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனமாக 2.11 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு ; மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி தகவல்….

பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனமாக 2.11 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிலைமை குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளில் மிகப்பெரும் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது என்றும் பண வீக்கம் கட்டுக்குள் உள்ளது என்றும் தெரிவித்தார். பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனமாக 2.11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்த அருண் ஜெட்லி, பக்கத்து நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தை மேம்படுத்த அடுத்த 5 வருடங்களில் 6.92 லட்சம் கோடி ரூபாய் செலவில் 83 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *