உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி விளம்பரப் பதாகைகள் வைக்கக்கூடாது ; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….

உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி விளம்பரப் பதாகைகள் வைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீலோச்சன குமாரி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, ஸ்ரீலோச்சனகுமாரி தாக்கல் செய்த வழக்கில், தமது வீட்டு முன்பு விளம்பரப் பதாகைகள் வைப்பதால் சிரமம் ஏற்படுவதாகவும், இதுகுறித்து மாநகராட்சி மற்றும் காவல்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறியிருந்தார். இதுதொடர்பாக, காவல்துறை மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் சார்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஸ்ரீலோச்சனகுமாரி வீட்டு முன்பு இருந்த பதாகைகள் அகற்றப்பட்டுவிட்டதாகவும், இதுபோன்று, விளம்பர பதாகைகள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இந்த வழக்கை முடித்துவைத்த நீதிபதி வைத்யநாதன், உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி, தமிழகத்தில் விளம்பரப் பதாகைகள் வைக்கவும், தேவையற்ற சுவர் விளம்பரங்கள் செய்யவும் அதிரடியாக தடை விதித்தார். இதுகுறித்து, அனைத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *