தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிக கவனம் செலுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், கந்து வட்டி கொடுமைகளை ஒழிப்பதற்கு வலுவான சட்டம் ஒன்றை மத்திய, மாநில அரசுகள் இயக்க வேண்டும் என்றும் இசக்கிமுத்துவின் குடும்பத்தினர் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக, நீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு பதிலளிக்காமல், தனிநபரை தாக்கி பேசுவது, அவர்களின் அரசியல் பலவீணத்தை காட்டுகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிக கவனம் செலுத்த வேண்டும் என எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் கோரிக்கைவிடுத்தார்.