நெல்லையில் கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட குடும்பம் தீக்குளித்ததில் 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக விளக்கமளிக்குமாறு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து என்ற கூலித்தொழிலாளி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தீக்குளித்ததில் 3 பேர் உயிரிழந்தது தொடர்பான பத்திரிகை செய்திகளின் அடிப்படையில், தாமாக முன்வந்து மாநில மனித உரிமை ஆணையம் இந்த சம்பவத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதாக ஆணையத் தலைவர் நீதிபதி மீனா குமாரி தெரிவித்துள்ளார்.
கந்துவட்டி கொடுமை குறித்து மாவட்ட ஆட்சியரிடமும், காவல்துறை அலுவலகத்திலும் இசக்கிமுத்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? என்று 4 வாரத்திற்குள் விளக்கமளிக்குமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கும், உரிய விசாரணை நடத்தி 8 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில மனித உரிமை ஆணையத்தின் இயக்குனருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.