பேருந்து கட்டணம் ஒரு ரூபாய் குறைக்கப்பட்டது மக்களை ஏமாற்றும் செயல் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழக அரசு பேருந்து கட்டணத்தை ஒரு ரூபாய் ஒரு பைசா குறைக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது என்றும் இது தமிழக மக்களை ஏமாற்றும் செயல் என்றும் குற்றம்சாட்டினார். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வலுவான போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஜீயர் சாமிகளின் பேச்சு தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக கூறினார்.