பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பேருந்துகளின் கட்டண உயர்வால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அறிவித்திருந்தார். அதன்படி இன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேலும் நாளை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.