தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 28ம் தேதி நடைபெறும் என இந்திய பார்கவுன்சில் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய பார்கவுன்சில் சிறப்புக் குழு உறுப்பினர் சிங்காரவேலன், வரும் 25ம் தேதி பார் கவுன்சில் தேர்தல் தொடர்பாக அறிவிப்பாணை வெளியிடப்படும் என்றும், அன்று தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள் பட்டியல் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பிப்ரவரி 1ம் தேதி முதல் முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி 15 நாட்கள் நடைபெறும் எனவும், மனுக்களைத் திரும்பப் பெற பிப்ரவரி 22ம் தேதி கடைசி நாள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் மார்ச் 1ம் தேதி வெளியிடப்பட்டு, மார்ச் 28-ம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதில், 53 ஆயிரத்து 620 வழக்கறிஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்கள் என கடந்த 17-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அறிவித்தது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.எம். அக்பர் அலி செயல்படுவார் எனவும் இந்திய பார்கவுன்சில் அறிவித்துள்ளது.