பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேருந்து கட்டண உயர்வால் அனைத்து பொருட்களின் விலைவாசி உயரும் என்று குற்றம் சாட்டினார். மேலும் பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்திய எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், பேருந்து கட்டண உயர்வை கண்டித்து விரைவில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.