பேருந்து கட்டண உயர்வுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு… தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டே பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்;

அரசு பேருந்து கட்டண உயர்வு குறித்து அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகளை தற்போது காணலாம்…

சென்னை அம்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவான அளவே பேருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.

இதனிடையே திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திடீரென தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார். மேலும் பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் தோழமை கட்சிகளுடன் இணைந்து போராட்ட்த்தில் ஈடுபடுவோம் என்றும் கூறினார்.

மக்களை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *