கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புயல் மற்றும் கனமழையால் காணாமல் போன மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மரணம் அடைந்த மீனவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் காலதாமதப்படுத்தாமல் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறிய ஜி.ராமகிருஷ்ணன், கப்பல் படையை பயன்படுத்தி மீனவர்களை தேடும் பணியை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
2017-12-04