ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதை தாம் வரவேற்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக கன்னியாகுமரி செல்லும் டிடிவி தினகரன், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆர்கே நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் வெல்ல மண்டி தடராஜன் பொய் புகார் அளித்துள்ளதாகவும் கைதான தமது தொண்டர்கள் 3 பேரை நிதிபதியே ஏற்க மறுத்துள்ளார் என்றும் கூறினார்.
கட்சியின் கொடியையும், சின்னத்தையும் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என செல்லூர் ராஜூ கூறியுள்ளதை அடுத்து, சட்டம் தெரிந்தவர்கள் நடவடிக்கை எடுக்கட்டும் என்று கூறினார்.
நடிகர் விஷால் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை வரவேற்பதாக தெரிவித்த டிடிவி தினகரன், விஷாலுக்கும் தமக்கும் நட்பை தவிர ஒன்றும் இல்லை என்று கூறினார்.