சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது; பாஜகவின் வேட்பாளர் கரு.நாகராஜன் மற்றும் நடிகர் விஷால் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என தகவல்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில் பாஜகவின் வேட்பாளர் கரு.நாகராஜன் மற்றும் நடிகர் விஷால் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27ம் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நான்கு நாட்களில் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளர்கள் மட்டுமே மனு தாக்கல் செய்தனர். பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், டி.டி.வி. தினகரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று பாஜக – வின் வேட்பாளர் கரு.நாகராஜன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, நடிகர் விஷால் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து இந்த தேர்தலில் திமுக, அதிமுக, டி.டி.வி.தினகரன், பாஜக, நடிகர் விஷால், தீபா ஆகியோர் போட்டியிடுவதால் 6 முனைப்போட்டி நிலவுகிறது.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளராக மருதுகணேஷுக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் மதிமுக –வும் தற்போது திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மதிமுகவின் உயர்மட்ட செயற்குழு கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபவடுவார்கள் என்று வைகோ அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னை அறிவாலயத்தில் தி.மு.க.வுக்கு ஆதரவு தருவதாக ம.தி.மு.க. உயர்நிலை கூட்டத்தில் எடுத்த முடிவை தி.மு.க. சார்பில் மனப் பூர்வமாக வரவேற்பதாக அக்கட்சியின் செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு மதிமுக ஆதரவளிப்பதை வரவேற்பதாக எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆர்.கே நகரில் திமுக வேட்பாளருக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *