திருவண்ணாமலையில் இரண்டு மாணவிகள் ஓடைவெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த சேத்துப்பட்டு அருகே ஏழாம் வகுப்பு படித்துவரும் சங்கீதவாணி, ரூபிணி ஆகிய இரண்டு மாணவிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இராமாபுரத்திருந்து மேலப்பூண்டி செல்லும் சாலையின் நடுவே உள்ள ஏரியை கடக்க முயன்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. மாணவிகள் நிரம்பி வழிந்த ஏரியினால் அடித்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்தை பார்வையிட சென்ற செய்யார் கோட்டாச்சியார் கிருபானந்தம், சேத்துப்பட்டு வட்டாட்சியர் ஹரிதாஸ் ஆகியோரை அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கிரமங்களுக்கு செல்லும் வழியில் உள்ள ஒடைகளில் பாலம் அமைக்க பல முறை கோரிக்கையிட்டும் அதனை நிறைவேற்றாமல் இருந்ததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *