புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நடமாடும் சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், கன்னியாகுமரியில் 28 நடமாடும் மருத்துவக்குழுக்களும், திருநெல்வேலியில் 54 நடமாடும் மருத்துவக்குழுக்களும், தூத்துக்குடியில் 36 நடமாடும் மருத்துவ குழுக்களும் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். இதையடுத்து 044-24350496, 044-24334811, 9444340496 ஆகிய 24 மணி நேர கட்டுப்பாட்டு மைய எண்களை அவர் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.