ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றிக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரசாரம் மேற்கொள்ள உள்ளது; எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றிக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

உவமை கவிஞர் சுரதாவின் இல்லதிருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை அசோக் நகரில் உள்ள லட்சுமி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் இடதுசாரி கட்சிகளின் மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் இந்த ஆண்டிற்கான கவிஞர் சுரதா விருதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு தொழிலதிபர் நல்லி சின்னசாமி வழங்கி சிறப்பித்தார். பின்னர் செய்தியாகளிடம் பேசிய அவர், ஆர்.கே.நகர் இடைத்தேதலில் திமுக- வை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிப்பதாகவும் வரும் 7ஆம் தேதி நடைபெறவுள்ள வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கிறது என்றும் கூறினார். திமுக வேட்பாளரின் வெற்றிக்காக பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக மேடையில் பேசிய எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், சுரதாவின் தேன்மலை கவிதை நூல் தமிழ் உள்ள அவரின் பெருமையை பறைசாற்றும் என்று புகழாரம் சூட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *