புதுவைக்கு தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள புதிய தலைமை செயலாளர் அஷ்வினி குமார் சிறப்பாக செயல்பட்டு வருவதாக புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய தலைமை செயலாளர் அஷ்வினி குமார் விதிமுறைகளை பின்பற்றி வருவதால் அவர் பொறுப்பேற்ற நாள் முதல் அனைத்து பனிகளும் சுமுகமாக நடைபெற்று வருவதாக கூறினார்.
புதுச்சேரி விமான நிலையம் முறையாக இயக்கப்படவில்லை என்கின்ற முதலமைச்சரின் குற்றசாட்டை எற்றுகொள்ள முடியாது என்று கூறிய கிரண்பேடி, விமான சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் விமான சேவைகள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக புதிய தலைமை செயலாளர் நியமிக்கப்பட்டதர்க்கு கிரன்பேடி இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.