புதுச்சேரியில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் அரசுபேருந்துகளின் கட்டணங்களை அம்மாநில அரசு கடந்த சில வாரங்களுக்கு முன் உயர்த்தியது. இதனையடுத்து பேருந்து கட்டண உயர்வை கண்டித்து அம்மாநிலத்தில் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை 5 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை குறைத்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பேருந்து கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.