தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம், ஏழைகளின் உயர் சிகிச்சைக்கான கனவை பூர்த்தி செய்யும்… அசாமில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு…

தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம், ஒவ்வொரு ஏழையின் உயர் சிகிச்சைக்கான மருத்துவக் கனவையும் பூர்த்தி செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் Advatage Assam என்ற தலைப்பில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டினை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே மற்றும் 20க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இம்மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம், ஒவ்வொரு ஏழையின் உயர் சிகிச்சைக்கான மருத்துவக் கனவையும் பூர்த்தி செய்யும் உலகின் மிகப்பெரிய மருத்துவ சேவைத் திட்டம் என்றும் மோடி தெரிவித்துள்ளார். மேலும் வடகிழக்கு மாநிலங்களின் நிலையான மற்றும் வேகமான மேம்பாடுகளின் மூலம், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி வேகமெடுக்கும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *