புதுக்கோட்டை மாவட்டம் மேலத்தானியம் பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன், சரீஸ், அஷார் ஆகியோர் சொந்த ஊருக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தனர். பெருமாநாடு அருகே கார் சென்றுக் கொண்டிருந்த போது, நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து, திருக்கோகர்ணம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், தூத்துக்குடி அடுத்த மதிகெட்டான் ஓடை அருகே பேருந்தும், காரும் மோதிக் கொண்ட விபத்தில், 3 பேர் உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மரப்பாலம் அருகே நடந்த விபத்தில் இருவர் பலியாயினர். இந்த இரண்டு விபத்துகள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2017-10-01