புதுக்கோட்டை, தூத்துக்குடி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற சாலை விபத்துக்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மேலத்தானியம் பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன், சரீஸ், அஷார் ஆகியோர் சொந்த ஊருக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தனர். பெருமாநாடு அருகே கார் சென்றுக் கொண்டிருந்த போது, நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து, திருக்கோகர்ணம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், தூத்துக்குடி அடுத்த மதிகெட்டான் ஓடை அருகே பேருந்தும், காரும் மோதிக் கொண்ட விபத்தில், 3 பேர் உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மரப்பாலம் அருகே நடந்த விபத்தில் இருவர் பலியாயினர். இந்த இரண்டு விபத்துகள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *