புதிய மணல் குவாரிகள் திறக்கப்பட்டால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் எச்சரித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர் அரசியலமைப்பு சட்டப்படி ஆய்வு மேற்கொண்டதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்திருப்பது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார். மேலும் புதிய மணல் குவாரிகள் திறந்தால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.