திரைப்பட தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை சம்பவம் தொடர்பாக சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகர், இயக்குநர் சசிகுமாரின் அத்தை மகனான அசோக் குமார், சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன் நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகியும், இணை தயாரிப்பாளராகவும் இருந்து வந்தார். இந்நிலையில், திடீரென அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அசோக் குமார் எழுதியுள்ள கடிதத்தில், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் வாங்கிய கடனைக் கட்ட முடியவில்லை என்றும், அன்புச்செழியன் ஆட்களை வைத்து மிரட்டுவதால், மன உளைச்சல் தாங்காமல் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அசோக் குமார் தற்கொலைக்கு காரணமான அன்புச்செழியன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இயக்குநர்கள் சசிகுமார், அமீர், கரு.பழனியப்பன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள புகாரின் பேரில், அன்புச்செழியன் மீது வளசரவாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *